ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகல்

புதுடெல்லி: ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து இந்தியாவில் தற்போது ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படு இருந்தது. இந்த மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி டி.ஒய்,சந்திரசூட், நீதிபதிகள் ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா, சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க இருந்த நிலையில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணையில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார்.

The post ஒரே பாலின திருமண வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா விலகல் appeared first on Dinakaran.

Related Stories: