இதைத் தொடர்ந்து 4வது செட்டில் இரு வீரர்களும் விடாப்பிடியாகப் போராடினர். அதில் பதற்றமின்றி விளையாடி புள்ளிகளைக் குவித்த கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி நேரத்துக்கு நீடித்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி – மேடிசன் கீஸ் (அமெரிக்கா) நேற்று மோதினர். அதிரடியாக விளையாடிய ஜாஸ்மின் 6-3 என முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த 2வது செட்டில் மேடிசன் கீஸ் 7-6 (8-6) என வென்று பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. அதில் இரு வீராங்கனைகளும் 5-5 என சமநிலை வகித்தபோது, மேடிசன் கீஸ் காயம் காரணமாக போட்டியில் இருந்து கண்ணீர் மல்க விலகினார். இதையடுத்து ஜாஸ்மின் முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் விளையாட தகுதி பெற்றார். இப்போடி 2 மணி, 23 நிமிடத்துக்கு நடந்தது.
The post விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கார்லோஸ் appeared first on Dinakaran.