டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு கலெக்டர் தகவல் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 6: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலை பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இப்போட்டித் தேர்வின் மூலம், குரூப் 2 நியைில் 507 காலிப் பணியிடங்களும், குரூப் 2ஏ நிலையில் 1,820 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். தேர்வுப் பற்றிய முழு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போட்டித் தேர்வுக்கு, திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வரும் 8ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1.00 வரை கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு கலெக்டர் தகவல் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: