துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

சிவகங்கை, ஜூலை 3: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கும் துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதார பணியாளர், செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் ஆகிய காலி பணியிடங்கள் உள்ளன.

மேலும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டில் ஒலிப்பதிவாளர், நுண் கதிர்வீச்சாளர், புள்ளி விபரக் குறிப்பாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையிலானது. எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியிடத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை sivaganga.nic.in என்ற சிவகங்கை மாவட்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களுடன் சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் வருகின்ற 15.7.2024 மாலை 5மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post துணை சுகாதார நிலையத்தில் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: