மதுரையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூலை 5: மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டிஎன்எஸ்டிசி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மண்டல தலைவர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மண்டல பொது செயலாளர் ஜேம்ஸ் கஸ்பார்ராஜ் மதுரை மண்டல பொது செயலாளர் தேவராஜ் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் 2022 டிசம்பர் முதல் ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post மதுரையில் ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: