11 கிலோ புகையிலை பறிமுதல்

 

சாயல்குடி, ஜூலை 5: சாயல்குடியில் பெட்டிக்கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ புகையிலை பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கடற்கரை கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பதாக சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முகம்மது எஸ்ஸாத் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியிலுள்ள கடைகளில் சோதனை செய்தனர்.அப்போது வேலுச்சாமி மகன் சித்திரைவேலு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், 11 கிலோ எடையிலான 600 புகையிலை பாக்கெட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து, சித்திரை வேலுவை கைது செய்தனர்.

The post 11 கிலோ புகையிலை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: