டெல்லி: கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து 1,563 பேருக்கு தேசிய தேர்வு முகமை இன்று நீட் மறுதேர்வு நடத்தியது.