இவ்வழக்கு விசாரணையை மாநில போலீஸ் டிஜிபி அலோக் மோகன் சிஐடி வசம் ஒப்படைத்தார். கடந்த 17ம் தேதி எடியூரப்பா சிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில், சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
The post எடியூரப்பா மீது போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.