அதனால் அவர் எதுவும் மாறவில்லை என்பது போல் பாசாங்கு செய்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் மக்கள் மாற்றத்தை கேட்கிறார்கள். குடியரசு தலைவர் உரையில், நீட் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மணிப்பூரில் வன்முறை, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், ரயில் விபத்துக்கள், ரயில்களில் பயணிகளின் அவலநிலை மற்றும் தலித்துக்கள், ஆதிவாசிகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை” என்றார்.
The post எதுவும் மாறாதது போல பிரதமர் மோடி பாசாங்கு: குடியரசு தலைவர் உரைக்கு கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.