ரேஷன் கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு


சென்னை: ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் காரணமாக கொள்முதல் செய்வதில் சில கால தாமதம் ஏற்பட்டது. ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் கிடைக்கப் பெறாதவர்களுக்கு ஜூன் மாதத்துடன் சேர்த்து வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் துவரம் பருப்பு, பாமாயில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.

The post ரேஷன் கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு appeared first on Dinakaran.

Related Stories: