பின்னர் ஏழுமலை அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு, பின்னர் கோயிலுக்கு சென்று பூசாரி மூலமாக கயிறு கட்டிக்கொண்டு, சீட்டு எழுதி சுவாமி சிலை முன் வைத்து விட்டு மீண்டும் காஞ்சிபுரம் செல்ல காரில் புறப்பட்டனர். காரை ஏழுமலை ஓட்டி சென்றார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்திரை சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் பயந்து போன ஏழுமலை காரை திருப்பிக்கொண்டு சென்றார். தாறுமாறாக ஓடிய கார் எதிரே வந்த வாகனங்களை உரசி தள்ளியபடி பறந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த காரை பின் தொடர்ந்து வாகனங்களில் விரட்டி வந்த பொதுமக்கள் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் தடுத்து நிறுத்தி காரை ஓட்டி வந்த ஏழுமலைக்கு தர்ம அடி கொடுத்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை appeared first on Dinakaran.