இந்த நாட்களில் படகில் பொருத்தியுள்ள பலகைகளை சீரமைத்தல், என்ஜின்களில் தேய்மானம் அடைந்த உதிரி பாகங்களை நீக்கி பழுது பார்த்தல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மீன்பிடி தடைகாலம் நாளை இரவுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்காக, மீன்பிடி வலைகள், மீன்களை சேகரித்து வைக்கும் குளிர்சாதனப் பெட்டிகள், மீன்கள் அதிகமாக இருக்கும் இடத்தை காண்பிக்கும் அதிநவீன கருவிகள், கடலில் படகுகளை ஓட்டிச் செல்வதற்கான வழிகாட்டும் ஜி.பி.எஸ் கருவிகள் உள்பட மீன்பிடி உபகரணங்களை தங்கள் படகுகளில் ஏற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 61 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்குச் செல்லும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதால், மண்டபம் கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
The post நாளையுடன் மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள் appeared first on Dinakaran.