சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு

சென்னை: சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பு செய்ய உள்ளனர். சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர். வழக்கறிஞர் கௌதம் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூரில் கொலை செய்யப்பட்டார். சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் இன்று காலை 11 மணிக்கு போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.

The post சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: