ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று காலை ஒருநாள் அவசர பயணமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். ஆளுநர் ஆர்என் ரவி, நேற்று காலை 6.40 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் ஆகியோரும் உடன் சென்றனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பின்பு ஆளுநர் ரவி, முதல்முறையாக டெல்லிக்குச் சென்றுள்ளார். அவசர அழைப்பின்பேரில் உள்துறை அமைச்சரை சந்தித்துச் பேச டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. ஆளுநரின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

The post ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: