விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: விஜய பிரபாகர் தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் விருதுநகர் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 3,80,877 வாக்குகளை பெற்றதோடு, சுமார் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகர் நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகர், “விருதுநகர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. இதுதொடர்பான ஆதாரங்களையும் அளித்துள்ளோம். எனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளுடன் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த விருதுநகர் மக்களைவை தொகுதியில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளோம். எங்கள் மனுவை ஒருவாரத்தில் பரிசீலித்து பதில் தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ” என்று கூறினார்.

 

The post விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்: விஜய பிரபாகர் தேர்தல் ஆணையத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: