நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 1,500 பேர் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி. தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதியா? வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது. இவ்வாறு கூறினார். இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு உள்பட பலர் இருந்தனர்.
The post வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.