போலி யுபிஐ செயலி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் கைது

சென்னை: போலி யுபிஐ செயலியை கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். டாக்சிகளில் பயணித்து விட்டு போலி செயலி மூலம் பணம் அனுப்பியது காண்பித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பல கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் அனுப்பியது போல் மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில் திருப்பதியைச் சேர்ந்த ரியாஸ் ரஃபீக்கை நுங்கம்பாக்கம் போலீஸ் கைது செய்தனர்.

The post போலி யுபிஐ செயலி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: