அப்போது இரண்டு தரப்பினருக்கும் நிலம் தொடர்பாக கடும் வாக்குவாதம் எழவே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதை அடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்திருந்த பொது மக்கள் மோதலில் ஈடுபட்ட இருவரையும் தடுத்து விலக்கி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.
The post திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.