இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் டி.களத்தூர்- திருச்சி செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு நிலவியது. இதையறிந்த பாடாலூர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.
The post ஆலத்தூர் அருகே டி.களத்தூரில் குடிநீர் கேட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.