இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் நாளை முதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்யுமாறு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் துணை மின் நிலையங்களில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் அவசர நடவடிக்கைகளை கையாள அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். மின் விநியோகத்தை கண்காணித்தல், அவசரகால செயல்பாடு இருந்தால் கையாள தயாராக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்சாரம் தடைப்பட கூடாது,” இவ்வாறு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
The post வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்க : அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.