மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி

புதுடெல்லி: நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 10 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.2.10 லட்சம் கோடியை எட்டியது. இந்தநிலையில் மே மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.73 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 10 சதவீத உயர்வு ஆகும். 2025ம் நிதி ஆண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் மே மாதம் வரையில் ரூ. 3.83 லட்சம் கோடியாக உள்ளது. இது 11.3 சதவீத வளர்ச்சியாகும்.

The post மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.73 லட்சம் கோடி appeared first on Dinakaran.

Related Stories: