இந்த ஊழல் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. இதற்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த அம்மையாரை அவர் அப்படி பார்க்கிறார். அவர் பார்வை அப்படி இருக்கிறது. இதில் என்ன தப்பு இருக்கிறது’ என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
The post ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றது தப்பா? ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.