திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில் அலிபிரி மலைப்பாதையில் உள்ள மொகால் மெட்லு பகுதியில் பக்தர்கள் கண்முன் சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றது. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதுகுறித்து உடனடியாக திருப்பதி வனத்துறைக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். சாலையை கடந்த சிறுத்தை வயது முதிர்ந்து இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் கண்முன் சாலையை கடந்த சிறுத்தை appeared first on Dinakaran.

Related Stories: