கடந்த 2018க்கு பிறகு அதிகமாக பதிவான எண்ணிக்கை இதுவாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் வரை 283 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுதொடர்பாக செல்வ விநாயகம் கூறியதாவது: 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தற்போது பாதிப்பு என்பது ஒன்றுமே இல்லாததாகத்தான் கருதப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 50 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவிலான பாதிப்பு எந்த இடத்திலும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் இந்த பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு அவர் கூறினார்.
The post இன்புளுயன்சா பாதிப்பு குறைந்தது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.