அப்போது, கை விரலில் தங்க சிறுத்தை மோதிரமும், கழுத்தில் தங்க பட்டை செயினின் மேல் பகுதியில் சிங்கம், அதன் கீழ் பகுதியில் காளை மாட்டின் தலைப்பகுதியும் மாட்டிக் கொண்டு வித்தியாசமாக வலம் வந்தார். இதுபோதாதென்று சுமார் ஒரு கிலோ எடை கொண்ட 3 முருக்குகளை கொண்ட முரட்டு தங்கச்சங்கிலியும் அணிந்திருந்தார். இதுபோக எப்போதும் அவரின் அடையாளமான கூலிங்கிளாஸ், காதில் தோடு மற்றும் வளையங்கள், கையில் மோதிரம் போக பிரேஸ்லெட் என தகதகக்கும் நகைக்கடையாக வலம் வந்த வரிச்சியூர் செல்வத்தை, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வாய் பிளந்தவாறு ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர் appeared first on Dinakaran.