இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், கிளை செயலாளர் துரைமாணிக்கம், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கொளத்தூர் கிராமம் மட்டுமின்றி கொளக்காநத்தம், அணைப்பாடி, அயினாபுரம், திம்மூர், கூடலூர் போன்ற சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அரியலூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மருவத்தூர் போலீசார், மின் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
The post கொளத்தூர் அய்யனார் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்; திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.