இதையடுத்து விடுதி ஊழியர்கள் மற்றும் துப்புரவு ஊழியர் கமலா ஆகியோர் சென்று பார்த்தபோது சரனிதா வாயில் ரத்தத்துடன் மயங்கி கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது டாக்டர் சரனிதா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது உறவினர் நடராஜன் என்பவரை வரவழைத்து விசாரித்துவிட்டு பின்னர் சரனிதா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டரின் கையில் மின்சாரம் பாய்ந்ததற்கான அடையாளம் உள்ளன. லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது சார்ஜ் வயர் லேசாக கிழிந்து இருந்துள்ளது. அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சரனிதா உயிரிழந்துள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
The post லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: அயனாவரம் விடுதியில் சோகம் appeared first on Dinakaran.