தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர்

மதுரை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு விடுதிகள் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெறுவது கட்டாயம். மாணவ, மாணவியருக்கான விடுதிகளுக்கு ஜூலை மாத இறுதிக்குள் உரிமம் பெற்றிட விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும்: மதுரை ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: