இதனிடையே கடந்த மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் வீடுகளில் ‘ஏசி’ சாதன பயன்பாடு மற்றும் விவசாய மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வு தொடர்ந்து அதிகரித்து, இம்மாதம் 2ம் தேதி 20,830 மெகா வாட்டாக புதிய உச்சத்தை எட்டியது.அதிகபட்ச மின் தேவை பதிவானபோதும் சீரான மின் விநியோகத்தை தமிழக மின் வாரியம் உறுதி செய்தது. அதிகரிக்கும் மின் தேவையால் மின்சார பற்றாக்குறை ஏற்படுமோ என பலர் அச்சம் தெரிவித்தனர். மேலும் தேவையை பூர்த்தி செய்ய மின்சார சந்தையில் அதிக கொள்முதல் செய்யப்படுவதால் செலவு அதிகரித்தது. இதனிடையே தற்போது, காற்றாலை சீசன்தொடங்கி உள்ளதால், வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவது படிப்படியாக நிறுத்தப்படும். மேலும், தென்மாவட்டங்களில் கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளதால் தினசரி மின்தேவை குறையும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், தினசரி மின்தேவையை மின்வாரியம் எளிதாக பூர்த்தி செய்யும். இனி வரும் காலங்களில் காற்றாலைகளுக்கு சாதகமான காற்று வீசும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு : தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின்உற்பத்தி 4111 மெகாவாட்டை எட்டியது!! appeared first on Dinakaran.