தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்கிறது. முன்னதாக மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்ற நிலையில் நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது.

 

The post தென்காசி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: