நிலமோசடி வழக்கில் கைது ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? மேல்முறையீட்டு மனு 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

புதுடெல்லி: நிலமோசடியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை யால் கடந்த ஜனவரி 31ம் தேதி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், கடந்த 3ம் தேதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. ஹேமந்த் சோரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, வழக்கு விசாரணைக்கு நாங்கள் தயாராகவில்லை. அதனால் வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு ஹேமந்த சோரன் தரப்பில் ஆஜரான கபில் சிபல், \”தேர்தல் நடக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பான விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post நிலமோசடி வழக்கில் கைது ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? மேல்முறையீட்டு மனு 21ம் தேதிக்கு ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: