விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, மே 15: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலபல்லி, ரங்காம்பேட்டை, அரவட்லா, பாஸ்மர்பெண்டா உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுகள் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு பத்தலபல்லி கிராமத்தில் நூர் என்பவரின் விவசாய நிலத்தில் ஒற்றை காட்டு யானை பிளிறும் சத்தத்துடன் புகுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் அங்கு விரைந்து வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தொடர்ந்து யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வருவதால் இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Related Stories: