இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ பிரேமலதாவை வரவேற்க 50 பேர் வருவார்கள் என்று தெரிவித்தனர். ஆனால் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். மேலும் பேரணியாக செல்வதற்கு முன் அனுமதி எதுவும் பெறவில்லை. இப்போது நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுதான் பேரணி செல்ல வேண்டும் என்றனர். பிறகு போக்குவரத்தை கட்டுப்படுத்தி அவ்வப்போது வாகனங்களை போலீசார் விடுவித்தனர்.
பிரேமலதா அளித்த பேட்டியில், ‘‘விஜயகாந்த் உயிருடன் இருந்து பத்ம பூஷண் விருதை வாங்கி இருந்தால் அது மிகப்பெரிய வரமாக இருந்து இருக்கும். காலம் தாழ்ந்து கிடைத்தாலும், விருதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்’’ என்று கூறினார். பின்னர் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு புறப்பட்டுச் பிரேமலதா சென்றார்.
The post பத்மபூஷண் விருதுடன் சென்னை திரும்பிய பிரேமலதாவுக்கு வரவேற்பு போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்: ஏர்போர்ட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.