தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: