இந்நிலையில் நேற்று அதிகாலை அமைச்சர் அதிஷி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது ரத்த சர்க்கரை அளவு குறைந்தது. எனவே உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியூவில் அதிஷிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 5நாட்கள் நீடித்த அவரது உண்ணாவிரதப்போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கூறுகையில்,\\” அரியானாவில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்படும். இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி மற்றும் அவரது அரசியல் கூட்டணி கட்சிகள் எழுப்பும்” என்றார்.
The post காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.