சிறுமுகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

 

மேட்டுப்பாளையம், மே 6: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக கோவையில் கத்திரி வெயிலின் தாக்கத்தால் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வரவே சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தணிக்கும் வகையில் பொது இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அந்த வகையில் சிறுமுகை பேரூர் மற்றும் ஒன்றிய திமுக சார்பில் காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் தலைமையில் நேற்று தியேட்டர் மேடு பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர்,ஜூஸ், தர்பூசணி,திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன், சிறுமுகை பேரூராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

The post சிறுமுகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.