தெலங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு

ஐதராபாத்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மே மாதம் 1ம் தேதி ஐதராபாத் மக்களவை தொகுதியில் லதர்வாசா முதல் சுதா டாக்கீஸ் வரை தேர்தல் பேரணியில் பங்கேற்றார். அப்போது பொதுக்கூட்டமேடையில் அமித் ஷாவுடன் சில குழந்தைகளும் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒரு குழந்தை பாஜ சின்னத்துடன் காணப்பட்டது. தேர்தல் நிபந்தனைகளை மீறி சிறார்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் ஜி. நிரஞ்சன் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அமித்ஷா, ஐதராபாத் பாஜ வேட்பாளர் கே.மாதவி லதா, செகந்திராபாத் வேட்பாளர் ஜி.கிஷன், பாஜ எம்எல்ஏ ராஜா சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஐதராபாத் மொகல்புரா போலீசார் தெரிவித்து உள்ளனர்.

The post தெலங்கானாவில் அமித்ஷா மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: