பெண் இயக்குனரின் நாவல்

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பெண் இயக்குனர் ஐசுஜான்சி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘நாவல்’. என்ட்லஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருணாசல குமார் தயாரிக்கிறார். அபிஷேக் ஜோசப்ராஜ், ஆதிரை சவுந்தரராஜன் நடிக்கின்றனர். வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரகுநாத் இசை அமைக்கிறார். கண்ணன் பாடல்கள் எழுதுகிறார்.

படம் குறித்து ஐசுஜான்சி கூறுகையில், ‘இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும், நாம் நிஜமானவையே என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், அந்த நிஜத்தை மாற்றும் ஒரு எண்ணமே நிஜமான எண்ணம் என்பதை மையக்கருவாக வைத்து

இப்படத்தை இயக்கியுள்ளேன்’ என்றார்.

Related Stories: