இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, வீட்டில் கிடந்த உலக்கையால் மனைவி சீதாலட்சுமியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்த கருப்பசாமி, வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கருப்பசாமியை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவியை கொன்று கணவர் தற்கொலை appeared first on Dinakaran.