ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டதாகவும், வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் 24 மாகாணங்களிலும் மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டதாகவும், வெள்ளத்தின் போது வீட்டின் மேற்கூரைகளில் மக்கள் தஞ்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The post கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!: இயற்கையின் கோர பசியில் 38 பேர் பரிதாப பலி.. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்..!! appeared first on Dinakaran.