அர்ஜெண்டினாவில் பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பேரணி..!!

அர்ஜெண்டினாவில் பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் தலைநகரமே ஸ்தம்பித்தது. நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் அர்ஜெண்டினா நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பொது பல்கலைக்கழகங்களுக்கான நிதியை குறைத்து அரசு அறிவித்துள்ளது. இதனால் இலவச இளங்கலை கல்வி வழங்கும் புகழ்மிக்க பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

The post அர்ஜெண்டினாவில் பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பேரணி..!! appeared first on Dinakaran.

Related Stories: