24ம் தேதியான இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தேர் கோயில் அருகில் இருந்து புறப்பட்டு தேரோடும் முக்கிய வீதிகள் வழியாக சென்று பந்தலடிக்கு செல்லும். அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப் பாடி மகிழ்ச்சியோடு இருந்த திருநங்கைகள் அரவான் களப்பலிக்குப் பிறகு பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து தலைமுழுகி வெள்ளை புடவை உடுத்தி வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து அழுது சோகமாக வீடு திரும்புவார்கள். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
The post கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்: ஆடிப் பாடி மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.