உடனடியாக அதனை நிறுத்தினேன். ஆனால் நான் டோக்கன் கொடுத்தேன் என தவறான செய்தியை கிளப்பினர். தேர்தலுக்குப் பின்பு, அதிமுக எங்கள் வசம் வந்து விடும் என அண்ணாமலை கூறியுள்ளார். தேவையின்றி பேசும் பழக்கம் இல்லாத அவர், எதை வைத்து இப்படி கூறியுள்ளார் என்பதை தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா மீது பாஜவுக்கு பெரிய மரியாதை, அன்பு உள்ளது. எம்ஜிஆர் துவக்கிய கட்சி, நல்லவர்கள் கையில் வர வேண்டும் என அவர் பேசியுள்ளார். இவ்வாறு கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமி குறித்து கேட்டபோது, ‘‘கோவிலில் அமர்ந்து நல்ல விஷயம் பேசுகிறோம். சில மனிதர்கள் எதிர்மறையானவர்கள். மனிதர்கள் அல்லாது அரக்கத்தனமான ஜென்மங்களை பற்றி இங்கு பேசுவது சரியல்ல’’ எனக்கூறினார்.
The post ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார் எடப்பாடி ஒரு அரக்கத்தனமான ஜென்மம்: டிடிவி.தினகரன் காட்டம் appeared first on Dinakaran.