திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவிப்பு

 

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் பேட்டி அளித்துள்ளார். கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம். 5 ஆண்டுகளாக வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Related Stories: