மேலும் சில கருத்து கணிப்புகள் பின்வருமாறு…
வேலையின்மை, விலைவாசி உயர்வு யார் காரணம்?
ஒன்றிய அரசே காரணம் என 21%, மாநில அரசே பொறுப்பு என 17% மக்கள் கருத்து
நகர்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்
*வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனையாக உள்ளதாக பெருநகரங்களில் 65%, நகரங்களில் 59%, கிராமங்களில் 62% பேர் கருத்து
*ஆண்களில் 65% பேர், பெண்களில் 59% பேர் வேலை கிடைப்பது மிக கடினம் என கருத்து
*12% பேர் மட்டுமே வேலை சுலபமாக கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.
*இஸ்லாமியர்களில் 69% பேர் வேலையின்மையால் பாதிப்பு என கருத்து, பழங்குடி மக்களில் 59 சதவீதத்தினர் பாதிப்பு என கருத்துக்கணிப்பில் தகவல்
*உயர்ஜாதி இந்துக்களில் 17% பேர் தான் எளிதாக வேலை கிடைப்பதாக கருத்து
விலைவாசி உயர்வு தேர்தலில் எதிரொலிக்கும்
*நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக 71% மக்கள் கருத்து
*ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இந்த தேர்தலின் முக்கிய பிரச்சனை என கருத்து
*இஸ்லாமியர்களில் 76% பேரும், பட்டியல் வகுப்பில் 75% பேரும் விலைவாசி உயர்வால் அதிருப்தி
ராமர் கோயில், இந்துத்துவா பெரும் தாக்கம் ஏற்படுத்தாது
அயோத்தி ராமர் கோவில் தான் முக்கிய தேர்தல் பிரச்சனை என 8% பேர் கூறிய நிலையில், 2% பேர் மட்டுமே இந்துத்துவா தேர்தல் பிரச்சனையாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இதனால் இந்த 2 அம்சங்களும் மக்களவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
The post வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வே 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் : சி.எஸ்.டி.எஸ் கருத்து கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.