இதில், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 7 ஆடுகள் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியாகின. மேலும், 5 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல எழுந்து ஆட்டுப்பட்டிக்கு சென்ற பழனியப்பன், நாய்கள் குதறியதில் வளர்ப்பு ஆடுகள் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து எலுகாம்வலசு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறையினருக்கு பழனியப்பன் தகவல் அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
The post தாராபுரம் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 7 ஆடுகள் பலி appeared first on Dinakaran.