தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகையால் பரபரப்பு

 

ஈரோடு, ஏப்.10: ஈரோடு அருகே கதிரம்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக பொதுமக்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் கூறியிருப்பதாவது: மூலக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் மில்லில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் அந்த மில்லை நிரந்தரமாக மூடுவதற்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அந்த மில்லை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை தவிர்த்து தேர்தலை புறக்கணிப்பு செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில் கருப்பு கொடிகளும் கட்டப்பட்டு உள்ளன. இது தொடர்பாக வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பலகையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: