இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ், சரண் சிங் சார்பில் அவரது பேரன் ஜெயந்த் சவுத்ரி, எம்.எஸ்.சுவாமிநாதன் சார்பில் அவரது மகள் நித்யா ராவ் மற்றும் கர்பூரி தாக்கூர் சார்பில் அவரது மகன் ராம்நாத் தாக்கூர் ஆகியோர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து விருதுகளை பெற்றுக் கொண்டனர். வயது மூப்பு காரணமாக அத்வானியால் ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று நேரில் வரமுடியவில்லை. இதனால் அவரது வீட்டிற்கு நேராக சென்று விருது வழங்கப்பட உள்ளது.
The post எம்.எஸ்.சுவாமிநாதன் உட்பட 4 பேருக்கு பாரத ரத்னா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்: அத்வானிக்கு நேரில் தர முடிவு appeared first on Dinakaran.