காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு

புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 30வது கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடந்தது.இதில் கர்நாடகா,கேரளா மற்று புதுவை ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர். அதேப்போன்று தமிழ்நாட்டின் தரப்பில் இருந்து நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா,காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.

சுப்பிரமணியம், காவேரி தொழில்நுட்பக் குழு உதவி தலைவர் எம் செல்வராஜு, உறுப்பினர் எல்.பட்டாபி ராமன், உதவி செயற்பொறியாளர் ரம்யா, காவிரி தொழில்நுட்பக் குழு உதவி செயற்பொறியாளர் குளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர் நிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கடந்த 95 மற்றும் 96வது ஒழுங்காற்று குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து முன்னதாக விவாதிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களின் ஆலோசனைகளையும் கேட்ட ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர்,‘‘தமிழ்நாட்டுக்கு மே மாதத்திற்கான 2.5டி.எம்.சி தண்ணீரை காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post காவிரியில் 2.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: