இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், அன்னபிரசாதம் போன்றவை வழங்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரமும் நேற்று 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post 15 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.4.40 கோடி காணிக்கை appeared first on Dinakaran.